SHARE
image_pdfPRINT

தமிழ் மக்களுக்காக தனது பதவியை துறப்பதாக மகளீர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நடைபெற்ற நிகழ்வில் “மீண்டும் விடுதலைப்புலிகள் எழுச்சி பெற வேண்டும் ” என உரை நிகழ்த்தி இருந்தார். குறித்த உரை தொடர்பில் தெற்கில் சிங்கள அரசியல் வட்டாரத்தில் பாரிய எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

அந்நிலையில் நேற்று புதன்கிழமை மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் இன்று காலை ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி ஊடாக கருத்து தெரிவிக்கும் போது , தான் தமிழ் மக்களுக்காக பதவியை துறக்க உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.