SHARE

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் தீர்வின்றி இன்றுடன் (1)  500 ஆவது நாளை எட்டியுள்ளது

கடந்த 20-02-2017 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இவ்வாறு எவ்வித தீர்வுமின்றி தொடர்கிறது.

இந்நிலையில் இன்றைய தினம் வடக்கு கிழக்கைச் சேர்ந்த எட்டு மாவட்டங்களிலிருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தமது பிள்ளைகளை ஒருமுறையாவது காட்டுங்கள் என்று கதறி அழுத உறவுகள், ” சர்வதேசமே எமக்கு உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை, ஐ.நா. சபையே எங்கள் பிள்ளைகளுடன் நாங்கள் வாழும் உரிமையை உறுதிசெய், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடு, பன்னாட்டு தலையீட்டுடனான நீதி பொறிமுறையே எமது தேவை, சர்வதேசமே இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடு”  போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

புலத்திலும் ஆதரவு

இதேவேளை, உறவுகளின் இந்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க அதே நாளில் அமெரிக்கா, லண்டன் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் ஒன்று திரண்ட புலம்பெயர் உறவுகளும் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

Print Friendly, PDF & Email