வட்டுக்கோட்டைப்பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நுழைந்த திருடர்கள் கணவனை கட்டிவைத்துவிட்டு, கணவன் கண் முன்னே மனைவியை கொடூரமான முறையில் பாலியல் வன்புனர்வுக்குட்படுத்தியதுடன் வீட்டில் இருந்த நகைகள் பணம் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று அதிகாலை 1 மணியளவில் திருடர்கள் இருவர் நுழைந்துள்ளார்கள். அந்த வீட்டினுள் கணவனும் மனைவியும் இருந்துள்ளனர்.
வீட்டினுள் நுழைந்த திருடர்கள் கணவனை கடுமையாக தாக்கியதுடன் அவரின் வாய் கைகளை கட்டி கதிரையுடன் கட்டி வைத்துள்ளார்கள்.
பின்னர் மனைவியை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துள்ளார்கள். பின்னர் அங்கிருந்த சிறு தொகை பணத்தையும் பறித்துள்ளார்கள்.
பின்னர் மனைவியின் வாயை கட்டி வைத்து அவரை மிகவும் கொடூரமான முறையில் துஸ்பிரயோகம் செய்துள்ளார்கள்.
குறித்த பெண்ணின் உடல் உறுப்புக்கள் அனைத்திலும் கத்தியால் வெட்டி காயப்படுத்தியதுடன் வாய் தலை என்பவற்றில் பலமாக தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார்கள். சுமார் 4 மணி நேரம் வரை கொடூரமான முறையில் சித்திரவதை செய்துவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்றுள்ளார்கள்.
இந்த கொடூரமான சம்பவத்தில் 59 வயதான பெண்னே பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய கணவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளார். சம்பவத்தை அறிந்த அயலவர்களால் குறித்த இருவரும் மீட்கப்பட்டு நேற்று காலை 7 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பெரும் விசனம் தெரிவித்ததுடன் இவ்வாறன செயற்பாடுகளுக்கு சட்டம் மற்றும் நீதி துறை உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன். தமக்கு பாதுகாப்பில்லை என்றும் உடனடியாக குற்றவாழிகள் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு சமய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.