SHARE

தமிழீழ வரைபடத்தின் தோற்றம் மின்ன அம்பாள் உலா வந்த காட்சி ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று (29) நிகழ்ந்தேறியுள்ளது

மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் இன்று ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பூங்காவன திருவிழாவின்போது தமிழீழ வரைபடத்தால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்பாள் வெளி வீதி வலம் வந்த காட்சி இடம்பெற்றது.

மிகப் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட தமிழீழ வரைபடத்துடன் அம்பாள் ஊர்வலம் வந்த போது திரண்டிருந்த பக்தர்கள் உணர்வு நெகிழ்சி கொண்டனர்.

அதேவேளை குறித்த காட்சி படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களிடையே உள்ள தமிழ்த்தேசிய  உணர்வை சிதைக்க சிங்கள பேரினவாதம் பல நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்தி வருகின்றபோதிலும் மாறாக்கொள்கையுடன் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்பதை இவ்வாறான நிகழ்வுகள் எடுத்து காட்டுகினறன.

Print Friendly, PDF & Email