சிறுமியின் உடலில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கான தடையங்களும் உள்ளன என்று நீதிவானுக்கு வழங்கிய சட்ட மருத்துவ அறிக்கையில் சட்ட மருத்துவ அதிகாரி மயூரதன் குறிப்பிட்டுள்ளார்.
சுழிபுரம் பாடசாலையில் ஒன்றில் கல்வி பயிலும் 6 வயதுச் சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமியின் சடலம் இன்று உடற்கூற்று பரிசோதனைக்கு உளபடுத்தப்பட்டது. அதனையடுத்து அது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியால், நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியில் சிறுமி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்பதற்கான தடயங்கள் உடலில் உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது்
ஆனால் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.