SHARE

கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிக்கொடி, புலிகளின் சீருடை மற்றும் வெடிபொருட்கள் ஆட்டோவில் கொண்டு சென்றனர் என்ற குற்றச்சாட்டில் இதுவரையில் 4 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.

அவர்களுள் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் வன்னிவேளாம்குளம் பகுதியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த நபரை சாந்தபுரம் பகுதிக்கு அழைத்து வந்த பொலிசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அப்பகுதியெங்கும் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் மேலும் ஆயுதங்கள் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே அப்பகுதி எங்கும் போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்டு தேடுதல் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
இதனால் கிளிநொச்சி சாந்த புரத்தில் பதட்டநிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Print Friendly, PDF & Email