SHARE

யுத்தத்தின்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி கைப்பற்றிய பொது மக்களின் காணிகளை படிப்படியாக உரிய மக்களுக்கு பெற்றுத் தருவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று 1990 சுவசெரிய மன்றம் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் வடக்கு தெற்கு என்ற பேதம் இல்லாது அனைவருக்குமான சேவைகள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையில் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தேசிய பாதுகாப்பு கருதி காணிகளை கைப்பற்ற வேண்டிய தேவை இருந்தது. எனினும் பொது மக்களின் காணிகளை படிப்படியாக உரிய மக்களுக்கு பெற்றுத் தருவோம். காணிவிடுவிப்பது குறித்து இந்த வாரமும் நிதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது என்றார்.

Print Friendly, PDF & Email