SHARE

“பட்டதாரிகளுக்குப் பட்ட இறுதித் திகதி அடிப்படையில் நியமனம் வழங்குதல் வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து வடமாகாணத்தில் நேர்முகத்தேர்வை எதிர்கொண்ட வடமாகாணப் பட்டதாரிகள் நாளை வெள்ளிக்கிழமை(22) முதல் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்றுப் புதன்கிழமை(20) யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்பாக முக்கிய கலந்துரையாடலொன்று நடாத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின் இறுதியிலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை முற்பகல்-10 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email