ஜஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தால் வெளியிடப்பட்டுள்ள இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலிலுள்ள நபர்கள் தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அவற்றை தந்துதவுமாறு காணாமற்போனோர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இறுதிப் போர் நிறைவடைந்த பின் இராணுவத்தினர் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் அண்மையில் வெளியிட்டது.
அந்தப் பட்டியலை முறியடிக்கும் செயற்பாடுகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இறங்கியுள்ளது.
அதனடிப்படையில் காணாமற்போனோர் அலுவலகத்தின் ஊடாக விவரங்களைச் சேகரிக்கும் பணியில் வெளிவிவகார அமைச்சு களமிறங்கியுள்ளது.
இது தொடர்பாக காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த பெயர்களடங்கிய பட்டியல் ஒன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கு அமைவாக, தற்பொழுது 351 பெயர்களைக் கொண்டுள்ளதும், http://www.disappearance.itjpsl.com/#lang=tamilஇன் வாயிலாக அணுகிக்கொள்ளக்கூடியதுமான இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் 2009 மே மாதத்தில் இலங்கை இராணுவத்தினரின் காவலில் இருந்த போது காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்களினுடையதாகும்.
நாடாளுமன்ற சட்டம் ஒன்றினால் (2017ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சட்டம்) தாபிக்கப்பட்டுள்ள காணாமற்போனோருக்கான அலுவலகமானது, ஏனையவற்றுக்கு மத்தியில், காணாமற்போன நபர்களை தேடுதல் மற்றும் கண்டறிதல் மற்றும் குறித்த நபர்கள் எந்த சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதனை தெளிவுபடுத்துதல், மற்றும் அவர்களது தலைவிதி,
காணாமற்போன நபர்களின் சம்பவங்களை குறைப்பதன் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரசபைகளுக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளுதல் காணாமற்போன நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் நலன்களை பாதுகாத்தல் மற்றும் காணாமல் போன நபர்கள் அல்லது அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்படக்கூடிய முறையான நிவாரணங்களை அடையாளங்காணுதல் போன்ற செயற்பாடுகளுக்கான அதிகாரமுடைய இலங்கையிலுள்ள நிரந்தரமானதும், சுதந்திரமானதுமான அமைப்பு ஆகும்.
ஆகையால், பின்வருவன தொடர்பிலான தகவல்களை இலங்கையில் அல்லது வெளிநாட்டிலுள்ள எவரேனும் அறிந்திருந்தால் காணாமற்போனோருக்கான அலுவலகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வலியுறுத்தி, ஊக்குவிக்கின்றது.
சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலிலுள்ள நபர்கள் தொடர்பான ஏதேனும் ஏனைய/ மேலதிக விரிவான தகவல்கள் மற்றும் அவர்கள் எவ்வாறான சந்தர்ப்பத்தில் காணாமலாக்கப்பட்டார்கள் – எவரிடமும் / எந்த அமைப்பிடமும் காணப்படும், இந்த சட்டத்தின் 27ஆம் பிரிவினால் விபரிக்கப்பட்டுள்ள வகையில் காணாமற்போயுள்ளதாக கருதப்படத்தக்க பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் உள்ளடங்கலான ஏதேனும் நபர்களின் வேறு ஏதேனும் பட்டியல்கள் / தகவல்கள்
ஏதேனும் தகவல்கள் காணப்படின், அவற்றை பின்வரும் வகையில் தெரியப்படுத்தவும் – என்றுள்ளது.
தலைவர்,
காணாமல் போனோருக்கான அலுவலகம்,
முகவரி: 34, நாராஹேன்பிட வீதி, நாவல, இலங்கை
மின்னஞ்சல்: