SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்ப பெண்ணொருவர் நேற்று கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

35 வயதான இந்த பெண், யாழ்ப்பாணத்திலிருந்து சென்று கொழும்பு- கொட்டாஞ்சேனையிலுள்ள வீடொன்றில் வீட்டு பணிப்பெண்ணாக தங்கியிருந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

2ம் குறுக்கு தெருவிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு சொந்தமான வீட்டு உரிமையாளர், சம்பவ நேரத்தில் வர்த்தக நிலையத்தில் இருந்துள்ளார். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சம்பவம் நடந்துள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.