மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் இன்றிரவு (18) 7.15 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் முன்னிலையில் இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
அதனையடுத்து இன்றிரவு 7.15 மணியளவில் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரங்களின் பின்னரே சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
உடற்கூற்று பரிசோதனை தொடர்பான அறிக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் (வயது – 32) என்ற இளைஞனே மார்பில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.