SHARE
image_pdfPRINT

யாழ். மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றிக்கொண்டுள்ளது.

இன்று அதிகாலை 1 மணியளவிலே இத் தீ சம்பவம் ஏற்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடற்படை தீ அணைக்கும் பிரிவினர் தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவர காலை தொடக்கம் நீரினை பீச்சி அடித்தாலும் கப்பலின் இயந்திர பகுதி கடுமையாக தீ பற்றியதால் கப்பலிலுள்ள டீசல் தாங்கி Gas என்பன வெடிக்கும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

தனியார் ஒருவருடைய குறித்த கப்பலானது திருத்த வேலை காரணமாகே அங்கு ஒருவருடமா நங்கூரம் இடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் கப்பலில் தீ பரவியமைக்கான காரணங்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாமையால் இனந்தெரியாதோரின் திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.