SHARE
image_pdfPRINT

வட்டுக்கோட்டைப் பகுதியில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் கற்பித்த
தனியார் கல்வி நிறுவனம் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த தனியார் கல்வி நிறுவனத்தில் பயில வந்த பதின்ம வயதுச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச் சாட்டில் கணித பாட ஆசிரியர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் கல்விகற்பிக்கும் 41 வயதான கணிதபாட ஆசிரியரே கைதானார்.

இந்த நிலையிலேயே கல்வி நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.