SHARE

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தியா எக்னெலிகொடவுக்கு 50 ஆயிரம் நட்ட ஈடும், 3 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில், பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என நீதிமன்றால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, நீதிமன்றால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email