SHARE
image_pdfPRINT

யாழில்.ஊடகவியலாளர் ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி உள்ளார் என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான த. வசந்தரூபன் என்பவரை இன்று காலை இனம் தெரியாத நபர் ஒருவர் இடைமறித்து இணையத்தளத்தில் பதிவேற்றி உள்ள செய்தி ஒன்றினை அகற்றகோரியுள்ளார்.
அதற்கு தனக்கும் அந்த இணையத்திற்கும் தொடர்பு இல்லை என கூறியுள்ளார். அதனை அடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.