SHARE
image_pdfPRINT

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கான ஆளுநரின் நடமாடும் சேவை எதிர்வரும் 14.06.2018 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் காணி உரிமம் தொடர்பிலான முறைப்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அதிகளவில் ஆளுநர் செயலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக ஆளுநர் றெஜினோல்ட் குரே நடமாடும் சேவையினை முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்தில் நடாத்தவுள்ளார்.

ஏற்கனவே மூன்றுமுறை நடமாடும் சேவைகள் நடாத்தப்பட்டு அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் மேலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு தீர்வினை காண்பதற்காக நான்காவது தடவையாக எதிர்வரும் 14ம் திகதி ஆளுநர் றெஜினோல்ட் குரே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.