SHARE

பாதுகாப்பு அதிகாரிகள் தம்மை சந்திப்பதை புறக்கணித்து வருகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பு அதிகாரிகளே தம்முடன் சந்திப்புக்களை ஏற்படுத்த விரும்புவதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கவலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் மக்களின் பிரச்சினையை எவ்வாறு அறிவிப்பது என்பதே பிரச்சினையாக மாறியுள்ளது என மேலும் தெரிவித்த அவர், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி தம்முடனான சந்திப்புக்களுக்கு நேரத்தை ஒதுக்க qமுடியாது என கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என சுட்டிக்காட்டினார்.

Print Friendly, PDF & Email