SHARE

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

“யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு, பொது மருத்துவ வல்லுநர் பேரானந்தராஜா தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை வழங்கினர்.

உயர் குருதி அழுத்தம் காரணமாகவே அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. உரிய சிகிச்சையின் பின்னர் எம்.கே.சிவாஜிலிங்கம் 10ஆம் விடுதிக்கு மாற்றப்படுவார்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Print Friendly, PDF & Email