SHARE
image_pdfPRINT

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆளுநர்  செயலகத்திற்கு முன்பாக முற்றுகையிட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தொண்டராசிரியர் நேர்முகப் பரிட்சையில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் பெயர்கள் வெளியிடப்பட்ட போதும்  அவர்களுக்கான நிரந்த நியமனம் இன்னும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் கிழக்கு மாகாண பட்டதாரிகள் மற்றும் ஆசிரிய போட்டியில் சித்தியடைந்தவர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்கக் கோரியே திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்திற்கு முன்னால்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.