SHARE
image_pdfPRINT

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் உரிமை எமக்கு மட்டுமே உள்ளது. இதில் தெற்கில் உள்ளவர்கள் தலையிட வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டமை தொடர்பான தெற்கு அரசியல் வாதிகளின் விமர்சனங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவ் விடயத்தை கூறினார். மேலும் கூறுகையில்,
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பது எமது தனிப்பட்ட விடயம். இது தொடர்பாக மற்றவர்கள் கூறவேண்டிய அவசியம் இல்லை.

ஏற்கனவே எமக்கு உள்ள அதிகாரங்கள் குறைவு இருக்கும் அதிகாரிங்களையும் மேலும் எடுக்கப்பாக்கிறார்களோ தெரியாது. முள்விவாய்க்கால் நினைவுதினம் தொடர்பான தீர்மானத்ததை எடுக்கும் உரிமை எமக்கு தான் உள்ளது என மேலும் குறிப்பிட்டார்.