தமிழினப் படுகொலையின் நினைவேந்தலுக்காக முள்ளிவாய்க்கால் மண் உணர்வுபூர பணிகளுடன் தயாராகிவருகின்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களினது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து முள்ளிவாய்க்கால் மக்களுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள், கேப்பாபுலவு மக்கள், முல்லைதீவு மாவட்டத்தின் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்புக்களும் களத்தில் இறங்கியுள்ளன.
இம்முறை நினைவேந்தல் நிகழ்வினை எந்தவொரு அரசியல் சாயமுமில்லாது முள்ளிவாய்க்கால் மக்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து நடாத்துவதெனவும் நினைவேந்தல் நிகழ்வில் யாரும் கலந்து கொள்ளலாமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே வேளை, முள்ளிவாய்க்கால் மண்ணின் எந்தவொரு பகுதியிலும் யாருமே பிரிந்து நின்று நிகழ்வுகளை நடாத்த அனுமதில்லையெனவும் அம்மக்கள் முடிவெடுத்துள்ளனர்.