SHARE
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற தமிழ் மொழிப் பொதுத்தேர்வில் 5,300 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சுவிட்சர்லாந்து தமிழ் கல்விச் சேவையினால் 62 தேர்வு நிலையங்களில் நடத்தப்பட்ட தரம் 1 முதல் 12 வரையான வகுப்புகளிற்கான இவ்வாண்டிற்கான
தேர்விலேயே இப் பெரும் தொகையிலான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
தமது பிள்ளைகளிற்கு தமிழை கற்றுக்கொடுக்க பின்னிற்கும் புலம்பெயர் வாழ் சில தமிழ் பெற்றோர்களிற்கு, சுவிசில் 5 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மாணவர்கள் தம் தாய்மொழியை கற்பதில் காட்டிய ஆர்வமும் தாய்மொழி பற்றுக்கொண்ட பெற்றோரின் ஊக்கமும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இதேவேளை இவ்வாண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் இந்தியா அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி இளங்கலைமாணி பட்டப்படிப்பிற்கான தகமைத்தேர்வாகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
Print Friendly, PDF & Email