SHARE
image_pdfPRINT
ஊடக சுதந்திர தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூறப்பட்டனர்.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.பிரதான வீதியில் நீதிமன்ற கட்டதொகுதிக்கு அருகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி முன்பாக தீபங்கள் ஏற்றியும், மலர்கள் தூவியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு
அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்.மாநர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் , வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.