கடற்படையினரின் சமிஞ்ஞை விளக்குகள் அற்ற தண்ணீர் பவுசரில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
பூனகரி நாவற்குழி வீதியி இன்று (26) இரவு 8.30 மணியளவில் சமிஞ்ஞை விளக்குகள் ஏதுமற்று,பொறுப்பற்ற விதத்தில் கடற்ப்படையினரால் பயணித்த தண்ணீர் பவுசரில் மோதுண்டவர் நிலை தடுமாறிச் செல்ல, அவரின் பின்னே வந்த கார் மோதித் தள்ளியதில் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.