SHARE

 புலம்பெயர் அமைப்புக்களுக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அறைகூவல்!

 

மே 18 அன்று நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகளின் போது, உலகெங்கும் உள்ள புலம்பெயர் மக்கள், தமிழீழ தேசியக்கொடியை ஏற்றி, இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்து வருகின்றர். ஆனால் பிரித்தானியாவில் உள்ள பிருத்தானிய தமிழர் பேரவை என்ற அமைப்பு மட்டுமே தேசியக்கொடியை புறக்கணிப்பு செய்து, தேசிய விடுதலைப் போராட்டத்தையும், மடிந்த மக்களையும் அவமதித்து வருவது உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை கொதித்து எழ வைத்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டு வரும் பல தரப்பட்ட பிரமுகர்களும் ஒருமித்த குரலில், தேசிய தினங்கள் தனி அமைப்புக்களின் விருப்புகளுக்கும் தேவைகளுக்கும் அமைய நடாத்தப்படக்கூடாது. அவை அவற்றுக்குரிய நியமங்களின் படியே நடைபெறவேண்டும் எனவும் இதனை ஏற்க மறுப்பவர்கள் இந்த நிகழ்வுகளை நடத்தாமல் ஒதுங்க வேண்டும் என்றும் பகிரங்கமாக அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

இந்த வகையில், இந்தியாவில் கடும் கொடுப்பிடிகளுக்கு மத்தியில் சிறைப்படுத்தப்பட்டு வாழும் நிலையிலும், தமிழீழ விடுதலைக்காக அயராது உழைத்து வரும், தமிழீழ தேசிய புரட்சிக்கவிஞர் காசியானந்தன் அவர்கள் வழங்கியுள்ள முள்ளிவாய்க்கால் தின உரையில் புலம்பெயர் அமைப்புக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

அந்த உரையில் “இந்த நாளில் விடுதலைப்போராட்டத்தின் கொடியான புலிக்கொடியை ஏற்றுவோம் கம்பங்களில் புலிக்கொடியை ஏற்றுவோம் கைகளில் புலிக்கொடியை ஏந்துவோம் புலிக்கொடி தமிழீழ மக்களுடைய போராட்டத்தின் அடையாளம், தமிழீழ மக்களின் போராட்டத்தின் சின்னம் புலிக்கொடி, ஒரு கம்பத்தை நடுவோம் அந்தக்கம்பத்தின் காற்றில் மிடுக்கொடு புலிக்கொடி பறக்கட்டும், புலிக்கொடியை பார்க்கிறவனுக்கு தெரிய வேண்டும் இந்த புலிக்கொடி பறக்கிறது என்றும் போராட்டம் தொடர்கிறது என்று பொருள் படும் . புலிக்கொடி பறக்கட்டும் இன்னும் தமிழீழ மக்கள் களத்தில் நிற்கிறார்கள் என்று புரிந்துகொள்ளட்டும்” என்று உணர்வுபூர்வமாக வேண்டியுள்ளார்.

இந்த உரையின் முழுவடிவம் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் தின நிகழ்வுகளின் போது, திரையிடப்படும்.

Print Friendly, PDF & Email