SHARE
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
arrest1
அம்பகதவில பகுதியைச் சேர்ந்த 26 வயதான நபர்  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவு அதிகாரிகள் குழுவினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதோடு, அந்த நாட்டு அதிகாரிகளால் தடுக்கப்பட்டு பின்னர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த

 நபரை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

source: uthayan.com
Print Friendly, PDF & Email