SHARE

REFUGEEசிறிலங்காவில் இருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா சென்றடைந்த சில மணி நேரங்களிலேயே அகதி ஒருவர், சுகவீனத்தால் மரணமாகியுள்ளார்.

கடுமையாக சுகவீனமடைந்திருந்த 35 வயதான சிறிலங்கா அகதி, கிறிஸ்மஸ் தீவில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று மாற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே மரணமாகியுள்ளார்.

இந்தத் தகவலை அவுஸ்ரேலிய அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர் மரணமாவதற்கு சில மணிநேரம் முன்னதாகவே கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்திருந்தார்.

நேற்று அவுஸ்ரேலியாவுக்கு மூன்று பாரிய படகுகளில் 250 அகதிகள் சென்றிருந்தனர்.

முதலாவது படகு 101 பேருடன் கிறிஸ்மஸ் தீவுக்கு வடகிழக்கிலும், இரண்டாவது படகு 87 பேருடன் கொகோஸ் தீவுக்கு மேற்கிலும், மூன்றாவது படகு 51 பேருடன் ரிவி தீவுக்கு அருகிலும் மீட்கப்பட்டன.

இவற்றில் ஒரு படகில் சென்றவரே மரணமானதாக கருதப்படுகிறது.

Print Friendly, PDF & Email