SHARE

சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவினால் தாக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி, இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ நீதிமன்றம் நடத்திய விசாரணையில் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்தே, கொழும்பு தெற்கு புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பதிகாரியாக இருந்த மேஜர் சந்தன பிரதீப், வேறு படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்தபோது, மேஜர் சந்தன பிரதீப் பணியில் இருக்கவில்லை என்றும், தனது அதிகாரபூர்வ ஆயுதத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகவும், சூதாட்ட வர்த்தக முகவருக்கு பாதுகாப்பு அளித்ததாகவும் குறிப்பிட்ட இராணுவ அதிகாரி மீது சிறிலங்கா இராணுவ நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.