எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தி வன்னி மாவட்டத்தில் போட்டியிட இருந்த சட்டத்தரணி தனஞ்சன் தற்போது தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவது சரியான தீர்மானம் அல்ல என பல அறிவுறுத்தல்கள் தனக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் இந்த போட்டியிட வேண்டாம் என்ற முடிவினை எடுத்துள்ளதாக சட்டத்தரணி தனஞ்சயன் தனது முகநூல் பக்கத்தின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.