SHARE
image_pdfPRINT

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று  யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் குறித்த  தேர்தல் விஞ்ஞாபனம்  வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து, தமிழ் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கான அவசியம், புறநிலை, முக்கியத்துவம் என்பவற்றையும் தமிழர்கள் தேசமாக தமது நிலைப்பாடு, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை  வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பொது வேட்பாளராக அரியநேந்திரனின் தேர்தல்  விஞ்ஞாபனம் அமையப்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.