SHARE

சாதனைத் தமிழன் தர்ஷன் செல்வராஜா பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடரினை சற்று முன்னர் பிரான்சின் பெருநகரில் ஏந்திச் சென்றார்.

பிரான்சில் ஒலிம்பிக் போட்டிக்கள் ஆரம்பமாவதற்கு இன்னும் 10 நாட்களே மீதமுள்ள நிலையில் ஒலிம் போட்டியின் அடையாளமான ஒலிம்பிக் சுடர் ஆரம்பவிழா அரங்கை நோக்கி பலரால் எடுத்துச் செல்லப்படுகின்றது.

இந்நிலையிலேயே இந்த ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் நபர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டிருந்த ஈழத்தமிழன் தர்ஷன் செல்வராஜா இன்று திங்கட்கிழமை (15) மாலை ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச்சென்றார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிரான்சில் சிறந்த பாண் தயாரிப்புக்கான முதலிடத்தை பெற்ற தர்சன் செல்வராஜ் அந்த வெற்றியின் மூலம் அவ்வாண்டு முழுவதும் பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகைக்கு அவரின் வெதுப்பகத்திலிருந்தே காலை உணவை வழங்கும் வாய்ப்பை பெற்றார்.

அதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி பிரான்சில் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடரை ஏற்திச் செல்லும் வாய்ப்பும் அவரை தேடி வந்தது.

ஒலிம்பிக்கின் தாயகமான கிரீசில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி பல நாடுகளுடாக பயணித்து இறுதியாக ஒலிம்பிக் நடைபெறும் நாடான பிரான்சை வந்தடைந்தது. பின்னர் பிரான்சின் புற நகரங்களினூடாக ஏந்திவரப்பட்ட ஒலிம்பிக் ஜோதி தற்போது பிரான்சின் தலைநகரை வந்தடைந்துள்ளதுடன் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ள அரங்கை நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றது.

இந்நிலையிலேயே ஒலிம்பிக் ஜோதியின் இன்றைய பயணத்தின் தர்சன் செல்வராஜா பெருமை மிகு ஒலிம்பிக் ஜோதியை தனது கரங்களில் ஏந்தி பெரு வீதியில் பயணித்தார்.

படங்கள் – சொக்கலிங்கம் விஜிதன்