SHARE
image_pdfPRINT

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியமான போதிலும், இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

யார் நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தல் பழைய முறையிலேயே நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.