SHARE
image_pdfPRINT

தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய இரு பெண்கள் உட்பட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மேற்படி மூவரையும் சம்பூர் பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

கைதானவர்களில் தமிழ்த் தேசிய மக்கள் முண்னனியின் முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஹரிகரகுமாரும் உள்ளடங்குகின்றார்.

இரவு வேளையில் துப்பாக்கிகளுடன் வந்த ஆண், பெண் பொலிஸாரால் அநாகரிகமான முறையில் கைதான மூவரும் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.