SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளதுடன், இருவரைக் கைது செய்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் போதைப்பொருள் கைமாறுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், திடீர் சோதனை நடவடிக்கையினை மருதங்கேனி பகுதியில் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 35 வயதுடைய இரு நபர்களை கைது செய்துள்ளமையுடன் அவர்களிடமிருந்து 30kg 500g கேரளா கஞ்சாவினை போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களுடன் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.