SHARE

பிரித்தானியாவில் எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானிய அரசியல் வாதிகள் தமது தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழினப்படுகொலைக்கு நீதியும் தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் வழங்கவேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் தமிழ் இளையோர் கட்சிகளுக்கான தேர்தல் பிரச்சாரங்களில் கைகோர்த்துள்ளனர்.

இந்நிலையில் Esher மற்றும் Walton தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி ஆளும்கட்சியின் சார்ப்பில் தேர்தலில் போட்டியும் கவுன்சிலர் John Cope அவர்களின் தேர்தல் பரப்புரையில் தமிழ் இளையோர் கலந்து கொண்டு அவருக்கான பிரச்சார பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07)நடைபெற்ற மேற்படி பிரச்சாரப்பணியில் செயற்பாட்டாளர்களான சசீஸ்கண்ணா நடராஜா மற்றும் தனுஷாத் மரியநேசன் ஆகியோர் தலைமையில் அனுஷன் பாலசுப்ரமணியம், கோகுலன் சிவசிதம்பரம், விதுஷன் கணேசமூர்த்தி, சாஹீம் முகம்மது, சதீஸ்கரன் குணரத்தினம் ஆகிய செயப்பாட்டர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email