SHARE

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்கு முறைகளுக்கு எதிராக, 13 ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கவனயீர்ப்பு பேரணியும் இடம்பெற்றது.

குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது பொதுமக்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

13 ஆவது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை மக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த வடக்கு பிரதேச செயலகம் 1988 ஆம் ஆண்டு தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது.

இதனை தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Print Friendly, PDF & Email