SHARE

முல்லைத்தீவு புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் உமாசங்கர் இன்று (03) கடமைகளை பொறுப்பேற்றார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் அகிலேந்திரன் அண்மையில் வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவரது பதவி வெற்றிடத்திற்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது

மருத்துவ நிர்வாக துறையில் சிரேஷ்ட தரத்துக்கான பதவி உயர்வுகள் அண்மையில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியர் முத்துக்குமாரசுவாமிசர்மாஉமாசங்கர் இன்று கடமைகளை பொறுப்பெற்றார்

Print Friendly, PDF & Email