SHARE
image_pdfPRINT

13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக மட்டுமே இனப்பிரச்சினைக்கானத் தீர்வினை எட்ட முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (02.04.2024) ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயத்தில் இனியும் சர்வதேசத்தை நம்பிக் கொண்டு, தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாட்டை தமிழ்த் தரப்புக்கள் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.