SHARE

வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ தேசியத்தவைர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இல்லத்தில் சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சாந்தனின் புகழுடலுக்கு சிவப்பு மஞ்சள் நிற கொடிகள் போர்க்கப்பட்டு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக உடுப்பிட்டி – இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது.

இறுதி ஊர்வலம் அறிவகம் சனசமுக நிலையம் ஊடாக தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம் ஊடாக வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக நாவலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை ஊடாக பயணித்தது.

பொலிகண்டி ஊடாக பயணித்து எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் வெள்ளங்குளம் இந்து மயானத்தில் புகழுடல் விதைக்கப்படும். இறுதி அஞ்சலியில் சமயத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email