SHARE

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல் நலக்குறைவால் இந்தியாவால் காலமானார்.

இலங்கைக்கு இன்றைய தினம் புதன்கிழமை இரவு செல்லவிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. அதன் பின்னா் சில ஆவணங்கள் தேவையாக இருந்ததால் அவரது பணயம் தாமதமாகியது. 

பின்னர் இன்று புதன் கிழமை (28) இரவு இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அவா் மரணமானாா் என கூறப்படுகிறது

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், விடுதலையான பின்னரும் திருச்சி சிறப்பு முகாமில் குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக  திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தாா். 

Print Friendly, PDF & Email