SHARE

மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமத்தில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைதிவழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சிறுமியின் மரணத்திற்கு நீதியானதும் விரைவானதுமான நியாயத்தை வழங்க கோரியும், விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிவழங்கு, விசேட விசாரணை பொலிஸ் குழுவை நியமிக்கவேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இணையவழி பாலியல் துஸ்பிரயோகங்களை நிறுத்து, எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு அமைதி வழி போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

Print Friendly, PDF & Email