SHARE

தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Hon. Siobhain McDonagh MPஅவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் குழு தொடர்ந்து களமிறங்கி செயலாற்றி வருவதுடன் அவரது தொகுதியெங்கும் துண்டுபிரசுரங்களை விநியேதாகித்து வருகின்றனர்.

பிரித்தானியாவில் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் Mitcham மற்றும் Morden தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துபவருமான Hon. Siobhain McDonagh MPஅவர்களின் தேர்தல் பரப்புரையில் தமிழ் இளையோர் கலந்து கொண்டு துண்டுபிரசுரங்களை விநியேதாகித்து வருகின்றனர்.

நேற்றைய சனிக்கிழமை (10) மற்றும் இன்றைய மற்று ஞாயிற்றுக்கிழமை (11) ஆகிய இரு நாட்கள் தொடர்ந்து அவரது தேர்தல் பரப்புரைக்கு கைகோர்த்து செயலாற்றியுள்ளனர்.

தமிழ் மக்களிற்கு எதிராக சிறிலங்காவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சியொபியன் மெக்டோனாக் எம். பி அவர்கள் சிறிலங்காவில் சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டு தப்பித்து பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள எங்களைப் போன்றவர்களுக்காக முன்வந்து குரல் கொடுப்பது மட்டுமல்லாது தமது அரசிடம் எமது பிரச்சினைகளை எடுத்து கூறவும் தயங்குவதில்லை என பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் இளையோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email