SHARE

தமிழர்களின் திருநாளான தைப் பொங்கல் விழாவினை பிரித்தானியா வாழ் தமிழ் சமூகத்தினருடன் இணைந்து பிரித்தானியாவின் தமிழருக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவினரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுவின் (APPG-T) அனுசரணையுடன் இலண்டன் வெஸ்ட்மினிஸ்டரில் நேற்றைய தினம் (15) நடைபெற்ற இந்நிகழ்வில் பிரித்தானிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பரந்த தமிழ் சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டாடினர்.

இதில் பொங்கல் மற்றும் தமிழர் பாராம்பரிய உணவுகள் இனிப்புகள் பரிமாறப்பட்டதுடன் தமிழர் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

படங்கள் – அனுசன் பாலசுப்பிரமணியம்

Print Friendly, PDF & Email