SHARE

ஐக்கிய இராச்சிய தமிழ் மரபுரிமை சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ‘தேசிய தமிழ் மரபு திங்கள் நிகழ்வு – 2024‘ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (7) பிரித்தானியாவின் ஹேய்சில் (Hayes) நடைபெறவுள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழர்களால் ஜனவரி மாதத்தில் தமிழ் மொழியின் பெருமையும் தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளும் கொண்டாடப்படுவது யாவரும் அறிந்ததே! அந்தவகையில் ஐக்கிய இராச்சிய தமிழ் மரபுரிமை சமூகம் நடப்பாண்டிற்கான தமிழ் மரபு திங்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.01.2023) பிரித்தானியாவில் பிரமாணடமாக கொண்டாடுகின்றது.

Crystal Hayes, 466-468 Uxbridge Road Middlesex, Hayes, UB4 0SD எனும் இடத்தில் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இவ் விழா நடைபெறவுள்ளவுள்ளது.

தமிழர் கலை கலாச்சார பண்பாடுகளை முற்று முழுதாக வெளிக்கொணரும் இக் கொண்டாட்டத்தில் நேரலை கண்காட்சி, பாரம்பரிய மற்றும் சமகால அரங்காற்றுகை, தமிழர் கலைகள் மற்றும் இசைகள். தமிழ் உணவு வகைகள் மற்றும் வியாபார, தொண்டு நிறுவனங்களின் விற்பனையகம் என்பனவும் இடம்பெறவுள்ளன.

முற்றிலும் இலவசமான இந்நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார பண்பாடுகளையும் பிரித்தானியாவிலும் கொண்டாடும் வண்ணம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரித்தானிய பெரு நகர அவை ஜனவரி மாதத்தை பிரித்தானியாவில் தமிழர் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்பு மிக்க இம் மரபு திங்கள் விழாவிற்கு நமது ஈழநாடு உம் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email