SHARE

புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்புவதற்கான திட்டத்தை மீளமைத்து புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள் ருவாண்டா நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டத்திற்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அடிகளை புகாததாக மாற்றும் ரிஷி சுனக்கின் குறிக்கோளின் ஒரு பகுதியாக, உள்துறைச் செயலாளர் ஜேம்ஸ், ருவாண்டாவுடன் ஒரு ஒப்பந்தத்தை முடிப்பதற்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

ருவாண்டாவில் உள்ள சட்ட அமைப்பு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய பிரித்தானிய அரசாங்கம் வழக்கறிஞர்களை அனுப்பும் யோசனையை உள்துறை அலுவலகம் மிகக் கவனமாக கவனித்து வருவதாக அமைச்சர் லூசி ஃப்ரேசர் கூறினார்.

ருவாண்டா நீதிபதிகளுக்கு ஆலோசனை வழங்க பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள் அனுப்பப்படலாம் என டெய்லி டெலிகிராப் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், இந்த வாரத்தில் ஒப்பந்தம் கைசேதப்படும் என்றும் அதன்பின்னர் பிரிட்டனுக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆப்பிரிக்க தேசம் பாதுகாப்பான இடம் என பிரித்தானிய நாடளுமன்றில் வலியுறுத்த முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email