தமிழர் தாயகம் உட்பட உலகில் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் இன்று மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கையின் வடக்கு- கிழக்கில் இம்முறை மாவீர் துயிலுமில்லங்கள் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
அந்தவகையில் ஈழதேசத்தின் யாழ்மாவட்டத்தில் கோப்பாய், வடமராட்சி, கொடிகாமம், உடுத்துறை தீவகம் சாட்டி, மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் வல்வெட்டித்துறை தீருவில் திடல் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில்- கனகபுரம் விசுவமடு, முழங்காவில்,
மன்னார் மாவட்டத்தில்- ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான்,
முல்லைத்தீவு மாவட்டத்தில்- விசுவமடு, முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில், பச்சைப்புல்மோட்டை
வவுனியா மாவட்டத்தில்- ஈச்சங்குளம்
அம்பாறை மாவட்டத்தில் – கஞ்சிக்குடியாறு,
மட்டக்களப்பு மாவட்டத்தில் – மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதேவேளை, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சுவிஸ், கனடா, அமெரிக்கா, நியூஸிலாந்து உட்பட தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.