SHARE

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி மானிப்பாய் மற்றும் பலாலி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விணணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க தடைவிதிக்க கோரியே பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

நினைவு கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாது என்றும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் நினைவுகூர முடியும் என தெரிவித்து நீதிமன்றம் பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.

இதேவேளை மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி அச்சுவேலி மற்றும் தெல்லிப்பழை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email