SHARE

பெண்ணொருவரைக் கொலைசெய்த வழக்கில் 9 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கிளிநொச்சி, பிரமந்தனாறு பகுதியில கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம்  திகதி மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணைக்  கத்தியால் குத்திப் படுகொலை செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்ட குற்றச்சாட்டில் அப்பெண்ணிக் காதலனைப் பொலிஸார் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணையானது கடந்த 9 வருடங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இன்று நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்றத்தினால் மரண தண்டனை வழங்கப்படுவது இதுவே முதன் முறையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தீர்ப்பு வழங்கும் போது அனைவரும் எழுந்து நின்றதுடன் நீதிமன்றத்தின் அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு நீதிமன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email