SHARE
image_pdfPRINT

இலங்கை அரசாங்கத்திடம் நிலையான பொருளாதார கொள்கையில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தர்மபுரத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் எரிபொருள் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் தங்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது அரசாங்கம் IMF இன் இரண்டாம் கட்ட நிதியினை பெறுவதற்காக நாட்டுமக்களுக்கு பெரும் சுமையைகொடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.