SHARE

சிறிலங்கா இராணுவத்தின் புக்காரா விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட யாழ். நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் நினைவாக பிரித்தானியாவில் நேற்றையதினம் கரப்பந்தாட்டப்போட்டி ஒன்று நடாத்தப்பட்டது.

1995 செப்டெம்பர் 22 அன்று சிறிலங்கா இராணுவத்தின் புக்காரா விமானம் யாழ். நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது மூர்க்கத்தனமான குண்டு வீச்சை மேற்கொண்டு 21 மாணவர்களை படுகொலை செய்தது.

இந்நிலையிலேயே, குறித்த இனப்படுகொலையை நினைவுகூறும் வகையிலும் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மேற்படி உள்ளக அரங்கு கரப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் கொல்லப்பட்ட மாணவர்களின் திருவுருவப்படங்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்- அனுசன்

Print Friendly, PDF & Email